சென்னை, டிச. 19 –
சென்னை தியாகராயநகரில் உள்ள தருமை ஆதீன மடத்தில் திருக்குறள் மாநடு நடைப்பெற்றது. இந்து மக்கள் கட்சி நிறுவனரும் தலைவருமான அர்ஜூன்சம்பத் தலைமையில் நடைப்பெற்ற இந்த மாநாட்டில் திருவள்ளூவர் கிறிஸ்தவரா .. திருக்குறள் கிறிஸ்துவ நூலா என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைப்பெற்றது.
இதில் நூற்றுக்கணக்கான தமிழ் சான்றோர்கள், திருக்குறள் ஆர்வலர்கள், சமுக ஆர்வலர்கள் கலந்துக்கொண்டனர். ஆன்மீக தலைவர் பரசுராமன் குருஜி மாநில பொறுப்பாளர்கள் தனசேகரன், மோகன், சீனிவாசன், விஸ்வேஸ்வரர், மோகன், ஆனந்தன் மற்றும் மாநில அனைத்து பிரிவு பொறுப்பாளர்கள் சென்னை மண்டல பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பொறுப்பளார்கள் உரையாற்றினார்கள். திரளான பொதுமக்களும் இம்மாட்டில் கலந்துக் கொண்டனர்.