செங்கல்பட்டு மாவட்டம் காட்டங்குளத்தூர் ஒன்றியம் ஆலப்பாக்கம் பஞ்சாயத்தில் 15 ஆண்டுகளாக செயலாளராக பணிந்தவருக்கு ஊர்கூடி அவருக்கு பெருமைச் சேர்க்கும் வகையில் பிரிவு உபச்சார விழா நடத்தினர்.

செங்கல்பட்டு, செப். 5-

இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், ஆலப்பாக்கம் ஊராட்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஆலப்பாக்கம் ஊராட்சியில் 15 ஆண்டுகளாக செயலாளராகப் பணிப் புரிந்து தற்போது இடமாற்றம் செய்யப் பட்டுள்ள திரு. G. ஆறுமுகம் MA, அவர்களுக்கு  ஊர் கூடி பிரிவு உபச்சார விழா நடத்தினர். மேலும் அவரின் 15 ஆண்டு சேவையைப் பாராட்டி நினைவுப் பரிசுகளும் வழங்கி அவரை பெருமைப் படுத்தினர்.

இவ் விழாவிற்கு ஆலப்பாக்கம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர்  திரு K. சல்குரு அவர்கள் தலைமையேற்றார், துணைத் தலைவர் P.உமாபதி அவர்கள் முன்னிலை வகிக்க விழா சிறப்பாக நடைபெற்றது.

இந் நிகழ்ச்சியில் முன்னாள் காட்டாங்கொளத்தூர் ஒன்றிய பெருந் தலைவர்கள் திரு, E.சம்பத்குமார் BA திரு,    A. M பொன்னுசாமி, திரு இ.ஏ.வாசு அவர்களும், முன்னாள் காட்டாங்குளத்தூர் ஒன்றிய மாவட்ட கவுன்சிலர்கள் திரு S. சுஜாதா சங்கர், திரு, வ.ப மாரி, திரு,E. நரசிம்மன் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியில் 2006  to 2011, 2011 to2016 வரை இருந்த ஆலப்பாக்கம் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் அனைவருக்கும் மரியாதை செலுத்தப்பட்டது, நிகழ்ச்சியில் ஊராட்சியை சார்ந்த பொதுமக்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், ஊராட்சி பணியாளர்கள், மற்றும் ஊராட்சி குடியிருப்போர் நல சங்கம் போன்ற அனைவரும்  கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில்  ஊர்கூடி அளித்த பிரிவு உபச்சாரத்தை ஏற்றுக்கொண்ட ஊராட்சி செயலாளர் திரு, G.ஆறுமுகம் MA அவர்கள் உளம் மகிழ்ந்து கண்கள் கலங்கி ஆனந்தக் கண்ணீருடன் தனது 15 வருட உழைப்பினையும்  அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார்.

இதில்  ஆலப்பாக்கம் பஞ்சாயத்து மக்களைப் போல் நல் உள்ளம் கொண்டவர்களை பிரிய மனமில்லாமல் செல்கிறேன் என்ற மன வருத்தத்தையும் அவர் பதிவு செய்தார். ஆலப்பாக்கம் பஞ்சாயத்து கிராம மக்கள் என்றும் தங்களின் சிறப்பான பணியினை மறக்கமாட்டோம் என்று கூறி அவருக்கு பிரியா விடையளித்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here