செய்தி சேகரிப்பு ஆவடி ராஜன்

ஆவடி அருகே உள்ள முத்தாப் புதுப்பேட்டையில் திறந்திருந்த கடைக்குள் புகுந்து கொள்ளையர்கள் கைவரிசையில் ரூ. 4 இலட்சம் கொள்ளைப் போனது. சி.சி.டிவி. பதிவை சோதனை செய்து போலீசார் கொள்ளயர்களை பிடிக்க தீவிர வேட்டையில் இறங்கிவுள்ளனர்.

ஆவடி, செப். 9 –

முத்தாப்புதுப்பேட்டையில் குமார் என்பவர் ஹார்டு வேர் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று குமார் அருகே உள்ள தனது சரக்கு கிடங்கிற்கு உடல் உபாதைக் கழிக்க சென்றுள்ளார். அச் சூழலைப் பயன்படுத்தி கடையில் வேலை ஆட்கள் இல்லாததை அறிந்து கொண்டு மர்ம நபர்கள் திறந்திருந்த கடைக்குள் நுழைந்து கல்லா பெட்டியில் இருந்த 4 லட்ச ரூபாயை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

உடல் உபாதை கழித்து வந்த குமார் கல்லாப் பட்டி திறந்திருப்பதை அறிந்து அதனுள் வைத்திருந்த பணம் இருப்பதை உறுதி செய்ய பார்த்த போது பணம் கொள்ளை போனது தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து பதட்டத்துடன் அருகில் உள்ள முத்தாபுதுப்பேட்டை காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார்.  புகாரைப் பெற்றுக்கொண்டு அதன் மீது வழக்கு பதிவு செய்து திருடுப் போன கடையையும் அதனை சுற்றியும் சோதனை செய்தும் அருகில் உள்ள சிசிடிவி பதிவை சோதனையிட்டதில் இரண்டு நபர்கள் கடைக்குள் புகுந்து பணத்தை கொள்ளயடித்து இரு சக்கர வாகனத்தில் தப்பி செல்வது தெரிய வந்துள்ளது.

இதனை தொடர்ந்து தப்பி ஓடிய கொள்ளயர்களை பிடிக்க தீவிர முயற்சியில் போலீசார் ஈடுப்பட்டு வருகிறார்கள். பட்டப் பகலிலயே திறந்திருந்த கடையில் கொள்ளை போன இச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here