வேலூர்:

வேலூர், திருவண்ணாமலை மாவட்ட பால் கூட்டுறவு ஒன்றியம் (ஆவின்) வேலூர் சத்துவாச்சாரியில் இயங்கி வருகிறது. வேலூர் மாவட்டத்தில் ஒரு நாளைக்கு 3.83 லட்சம் லிட்டர் பாலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 1.33 லட்சம் லிட்டர் பால், ஆவின் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது.

 

அதில் 2 லட்சம் லிட்டர் பால் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. 72 ஆயிரம் லிட்டர் பால் வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் பாக்கெட் பாலாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 60 ஆயிரம் லிட்டர் பால் பவுடராக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. 2 லட்சம் முதல் 3 லட்சம் கிலோ வரையில் நெய் தயாரிக்கப்படுகிறது.

இவை தவிர ஆவின் மூலம் குல்பி ஐஸ், மோர், லஸ்ஸி ஆகியவையும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில் வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பாலில் மோசடி நடந்திருப்பது தெரியவந்தது. கடந்த 6 மாதங்களில் சுமார் 1½ லட்சம் லிட்டர் பால் கணக்கில் வராமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு சென்னை தலைமை அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் கடந்த 6 மாதங்களில் பால் கொள்முதல் செய்ததில் 1½ லட்சம் லிட்டர் பால் கணக்கில் வராதது உறுதியானது. அதைத்தொடர்ந்து இதுசம்பந்தமாக வேலூர் ஆவின் நிறுவனத்தில் அதிகாரிகளாக பணிபுரியும் ஹரிரெட்டி, மகேஸ்வரராவ், பாலாஜி, சேம் கிப்சன், ஊழியராக வேலை பார்க்கும் அப்பாத்துரை ஆகிய 5 பேரை சஸ்பெண்டு செய்து ஆவின் பொதுமேலாளர் கோதண்டராமன் உத்திரவிட்டுள்ளார்.

ஒரே நேரத்தில் 5 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்ட சம்பவம் ஆவின் ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here