திருவாரூர், நவ. 26 –    

திருவாரூர் அருகே உள்ள தேவர் கண்ட நல்லூர் பகுதியை சார்ந்த குவைத் வாழ் தமிழர் ஆரூர்.வாசு.இராமநாதன் எழுதிய ஆன்மீக நூலான ‘ஐம்முகத்தான் அந்தாதி’ எனும் நூல் வெளியிடப்பட்டது.

இந்நூலை கைலாய பரம்பரை  சூரியனார் கோயில் ஆதீனம் 28 வது குரு மகா சன்னிதானம், ஸ்ரீ ல ஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரியா சுவாமிகள் வெளியிட.. அதன் முதல் பிரதியை கும்பகோணம் ஜோதிமலை இறை பணி திருக்கூட்டம் தவத்திரு திருவடிக்குடில் சுவாமிகள் பெற்றுக் கொண்டார்.

தொடர்ந்து திருவாரூர் தமிழ்ச்சங்கம் தலைவர் நகைச்சுவை தென்றல் சண்முக வடிவேல், பணசை மூர்த்தி, திருமுறை மன்றம் செயலர் மகாலிங்கம், திருவாரூர் வேலுடையார் கல்வி குழும தலைவர் கே. எஸ். எஸ். தியாகபாரி உள்ளிட்டோர் ஆய்வுரை மற்றும் வாழ்த்துரை வழங்கினர்.

இறுதியாக நூலை எழுதிய ஆரூர்.வாசு.ராமநாதன் ஏற்புரை நிகழ்த்தினார்.

இந்த நிகழ்வில் ஏராளமான சிவனடியார்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

 

பேட்டி : வாசு.இராமநாதன்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here