கும்பகோணம் அருகே நாச்சியார் கோவிலில் அதிமுகவின் 50ஆவது ஆண்டு பொன் விழாவையொட்டி ஊர்வலமாக வந்து எம்ஜிஆர் ஜெயலலிதா உருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு இனிப்புகளை தொண்டர்கள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

கும்பகோணம், அக். 17 -.

கும்பகோணம் அருகில் நாச்சியார்கோவில் 1972ல் அக்டோபர் 17ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் அவர்களால் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தொடங்கப்பட்டு 49 ஆண்டுகள் முடிவடைந்து 50ம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதை கொண்டாடும் வகையில் ஒன்றிய செயலாளர் முத்துக்கிருஷ்ணன் தலைமையில் நாச்சியார் கோவில் பெருமாள் கோவிலில் இருந்து  மேளதாளத்துடன் மகளிர்அணி நிர்வாகிகள் நடனமாடிக் கொண்டு ஊர்வலமாக வந்து கடை வீதியில் உள்ள எம்ஜிஆர் ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மற்றும் நாச்சியார்கோவில் பல்வேறு பகுதிகளில் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி நலத்திட்ட உதவிகள் வழங்கிக் கொண்டாடினர்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தவமணி மற்றும் நிர்வாகிகள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here