செங்கல்பட்டு, ஏப். 26 –

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த சூளேரிக்காடு பகுதியில் கார் விபத்தை ஏற்படுத்திய வழக்கில் நடிகை யாஷிகா ஆனந்த் வழக்கின் விசாரணைக்காக செங்கல்பட்டு நீதிமன்றத்தில் கடந்த 24 ஆம் தேதி ஆஜரானார்.

நடிகை யாசிகா ஆனந்த் கடந்த 2021 ஆம் ஆண்டு தனது நண்பர்களான வள்ளி செட்டி பவனி மற்றும் இரு ஆண் நண்பர்களுடன் பாண்டிச்சேரி சென்று விட்டு மீண்டும் சென்னை நோக்கி அதிகாலையில் காரில் வந்துள்ளார்.

அப்போது யாஷிகா ஆனந்த் காரை அதிவேகமாக ஓட்டி வந்ததால் மாமல்லபுரம் அடுத்த சூளேரிக்காடு பகுதியில் சாலையோர தடுப்பில் மோதி விபத்தில் சிக்கியது.

மேலும் இவ்விபத்தின் போது காரில் இருந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வெள்ளி சட்டி பவனி உயிரிழந்தார். இவ்விபத்து தொடர்பாக மாமல்லபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு செங்கல்பட்டு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.

மேலும் இவ்வழக்கு கடந்த மார்ச் 24 ஆம் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், அவர் நீதிமன்றத்தில் ஆஜராகமல் இருந்துள்ளார். அதனால் நீதிமன்றம், நடிகை யாஷிகாவிற்கு பிடிவாரன்ட் பிறப்பித்திருந்தது. அதனைத் தொடர்ந்து அவர் கடந்த மாதம் மார்ச் 27 ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி உடல்நிலை சரியில்லாததால் ஆஜராக முடியவில்லை என விளக்கம் அளித்தார்.

இந்நிலையில் இன்று மீண்டும் இந்த வழக்கின் விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகினார். தொடர்ந்து விசாரணை நடத்திய நீதிபதி அவரை வரும் ஜூலை 27ஆம் தேதி மீண்டும் ஆஜராக உத்தரவிட்டுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here