மதுரவாயல், மே. 14 –
மதுரவாயல் அடுத்த நெற்குன்றம், சி.டி.என்.நகர் 14 குறுக்கு தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி (50), கழிவுநீர் லாரி ஓட்டி வருகிறார்.
இவரது நண்பர் நெற்குன்றம், ஜெயராம் நகரை சேர்ந்த ராமச்சந்திரன் (34), இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு நெற்குன்றம் பகுதியில் மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது ராமசந்திரனின் கள்ளக்காதலியிடம் சுப்பிரமணி செல்போனில் பேசியதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் ராமச்சந்திரன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுப்பிரமணியை குத்தியதில் சுப்பிரமணி பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சுப்பிரமணி நேற்று பரிதாபமாக இறந்து போனார்.
இதையடுத்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு ராமச்சந்திரனை கைது செய்து கோயம்பேடு விசாரித்து வருகின்றனர்.