கும்பகோணம், மார்ச். 24 –

கும்பகோணம் அருகே, திருவிடைமருதூர் தாலுகா, நாச்சியார் கோவில் காவல் நிலையத்துக்கு உட்பட்ட முத்துபிள்ளைமண்டபம், அணீஸ் நகரைச் சேர்ந்த சீதாஆனந்தா தேவர் என்பவரின் 40 வயதுடைய மகன் முனுசாமி மேலும், இவருக்கு திருமணமாகி ஜீவிதா என்ற மனைவியும், 2 மகன்கள் உள்ளனர். மேலும் முனுசாமி அப்பகுதியில் மீன் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் இவர் நேற்று இரவு வீட்டின் மொட்டை மாடியில் நின்று கொண்டிருந்த போது. திடீரென அடித்த பலத்த காற்றால் அருகிலிருந்த தென்னை மரம் முறிந்து இவர் மீது விழுந்துள்ளது.

இந்நிலையில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து தகவலயறிந்து அங்கு விரைந்து வந்த நாச்சியார் கோவில் காவல்துறையினர் உயிரிழந்த முனுசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனைக்குக் அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து அவரது மனைவி ஜீவிதா, காவல்நிலையத்தில் அளித்துள்ள புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here