கும்பகோணம், ஜன. 22 –
கும்பகோணம் நகர மேல்நிலைப்பள்ளியின் பழைய மாணவர் சங்கம் சார்பில் மாநில அளவிலான கால்பந்து போட்டி நகர மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியினை அப்பள்ளியின் பழைய மாணவர் சங்கத் தலைவரும், மூத்த வழக்கறிஞருமான சக்கரபாணி, செயலாளர் சிவகுமார், ரோட்டரி சங்கம் முன்னாள் மாவட்ட ஆளுநர் ரமேஷ் பாபு ஆகியோர் துவக்கி வைத்தனர்.
இதில் செயற்குழு உறுப்பினர் சங்கர், ரவிச்சந்திரன், சீதாராமன், ராஜேந்திரன், ராதாகிருஷ்ணன், ராம்குமார், லியோன், மதிமுக இளைஞரணி மாவட்ட செயலாளர் சரவணன் மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் இப்போட்டியில் ஐந்து மாவட்டங்களில் இருந்து நாற்பதுக்கும் மேற்பட்ட அணியின் விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.
மேலும் இப்போட்டியில் 12 வயது நிரம்பிய விளையாட்டு வீரர்களை கொண்ட 4 அணியினரும், 14 வயது நிரம்பிய விளையாட்டு வீர ர்கள் கொண்ட 14 அணியினரும், 17 வயது நிரம்பிய விளையாட்டு வீர ர்கள் கொண்ட 22 அணியினருமாக மொத்தம் 40 அணியினர் இப்போட்டியில் கலந்து கொள்கின்றனர்.
மேலும் இக் கால்பந்தாட்ட போட்டி இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இதில் தஞ்சை திருவாரூர் நாகை திருச்சி உள்ளிட்ட 5 மாவட்டத்திலிருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர். மேலும் நாளை நடைப்பெறும் இறுதிச்சுற்றில் வெற்றி பெறும் அணியினருக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது.