தமிழகத்தில் 5 தினங்களுக்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, ஆக. 29-

வட தமிழ்நாட்டை ஒட்டி ஆந்திர பகுதிகளில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவக் காற்று காரணமாக இன்று நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும் தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நாளை நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், வட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்யக் கூடும்.

நாளை மறுதினம் அதாவது ஆக 31 அன்று தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

செப் 1 அன்று வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்யக் கூடும்.

செப் 2 அன்று வட கடலோர மாவட்டங்கள் நீலகிரி, மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையைப் பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்பாடும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைப் பெய்யக்கூடும். அதிக பட்ச வெப்ப நிலை 33 மற்றும் குறைந்தப் பட்ச வெப்ப நிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும் அதிகப் பட்ச வெப்ப நிலை 34 மற்றும் குறைந்தப் பட்ச வெப்ப நிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு

கடந்த 24 மணி நேரத்தில் அதிகப் பட்சமாக சத்தியபாமா பல்கலைகம் செங்கல் பட்டு, அவலாஞ்சி நீலகிரி தலா 9 செ.மீ அளவிலும், சின்னக்கல்லார் கோவை, 8 செ.மீ அளவிலும், நடுவட்டம் நீலகிரி 7 செ.மீ அளவிலும் கேளம்பாக்கம் செங்கல் பட்டு 6 செ.மீ அளவிலும் சோழிங்கநல்லூர் சென்னை, காவேரிப்பாக்கம் இராணிப்பேட்டை, தேவலா நீலகிரி, வால்பாறை கோவை, தலா 5 செ.மீ அளவிலும், சோழாவரம் திருவள்ளூர், பொண்ணை அணை வேலூர், தலா 4 செ.மீ அளவிலும், சென்னை நுங்கம் பாக்கம், சென்னை விமான நிலையம், பெருஞ்சாணி அணை கன்னியகுமரி, வானமாதேவி கடலூர், தலா 3 செ.மீ அளவிலும், பெரியார் தேனி, ஆயிக்குடி தென்காசி, செஞ்சி விழுப்புரம், தலா 2 செ.மீ அளவிலும், பாபநாசம் திருநெல்வேலி, ஸ்ரீபெரும்புத்தூர் காஞ்சிபுரம், ஏற்காடு சேலம் தலா 1 செ.மீ அளவிலும் மழை அளவு பதிவாகி உள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் அதன் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

மீனவர்கள் வங்க கடல் பகுதிகளில் உள்ள  மன்னார் வளைகுடா மற்றும் தென் மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்தக் காற்று மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு இன்று செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதுப் போன்று அரபிக் கடல் பகுதிகளான கேரளா மற்றும் கர்நாடாக கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு பகுதிகளில் காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் ஆதலால் இன்றும் நாளையும் அப் பகுதிகளில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. அதைப் போன்று இன்றும் நாளையும் தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் இடையிடையே அது 60  கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என இந்திய மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவுத்தியுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here