கும்பகோணம், பிப். 14 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் நடைப்பெற்ற மாற்று கட்சியிலிருந்து சுமார் 112 கட்சியினர் அக்கட்சியில் இருந்து விலகி தங்களை தேமுதிக கட்சியின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொள்ளும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. மேலும் அவர்கள் அனைவருக்கும் அக்கட்சியின் துண்டுகளை அணிவித்து மாவட்டச் செயலாளர் வரவேற்று வாழ்த்து தெரிவித்தார்.

திருவிடைமருதூர் தாலுகா திருமங்கலக்குடி, தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் பல்வேறு கட்சியில் இருந்து சுமார் 112 பேர் தேசிய முற்போக்கு திராவிட கழக மாவட்ட செயலாளர் சுகுமார் தலைமையில் கட்சியில் இணைந்தனர். கட்சியில் இணைந்த அனைவருக்கும் சால்வை அணிவித்து வரவேற்று வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து மாவட்ட செயலாளர் தெரிவித்த போது தேசிய முற்போக்கு திராவிட கழகத்தில் இருப்பது மிகவும் பெருமைக்குரிய விஷயமாக உள்ளது. கேப்டன் மறைந்த பிறகும் பட்டி தொட்டி எல்லாம் அவரது புகழ் நிலைத்து கொண்டு இருக்கிறது.

கேப்டன் நடிப்பை தாண்டி மக்களுக்கு பல உதவிகளை செய்திருக்கிறார். அவர் சினிமாவின் உச்சத்துக்கு சென்றாலும் தன்னால் முடிந்த உதவிகளை செய்து கொண்டு இருந்தார். கொரோனவின் போது கூட பல ஏழை மக்களுக்கு உணவளித்தார்.

தன்னிடம் உதவி கேட்டு வந்தவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் பாரி வள்ளலை போல் வாரி வழங்கியவர் கேப்டன் விஜயகாந்த். மேலும், நடிகர் விஜயகாந்தை தன் குடும்பத்தில் ஒருவராக பல பேர் நினைக்கிறார்கள்.

விருத்தாச்சலம் தொகுதியில் பல்வேறு திட்டங்கள் கொண்டு வந்தவர் கேப்டன் விஜயகாந்த், என்று பேசினார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் செல்வம், முருகானந்தம், மாவட்ட துணைச் செயலாளர்கள் குருமூர்த்தி, மோகன்ராஜ், அமுதாமோகன், சூரியமூர்த்தி, மாவட்ட பொருளாளர் அன்பழகன், பொது குழு உறுப்பினர்கள் மகாராஜா, கோவிந்தராஜ், செயற்குழு உறுப்பினர்கள் காசி ரமேஷ், மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here