உத்திரமேரூர், டிச. 20 –

உத்திரமேரூரை சேர்ந்த வெங்கடேசன் என்பவரது மகன் சரத்ராஜ் 19 தனியார் கலை அறிவியல் கல்லூரியில் இரண்டாமாண்டு பயின்று வருகிறார். இவர் கடந்த 4 ஆண்டுகளாக கிக் பாக்சிங் பயிற்சி பெற்று வருகிறார்.

 இவர் கடந்த மாதம் சென்னையில் நடைப்பெற்ற மாவட்ட அளவிளான விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்ற சரத்ராஜ் மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்றார்.

இதனைத் தொடர்ந்து ஆசிய அளவிளான 79 கிலோ எடைப் பிரிவில் நடைப்பெற்ற போட்டியானது கடந்த வாரம் தாய்லாந்தில் நடைப்பெற்றது. இந்த போட்டியில் கலந்து கொண்ட சரத்ராஜ் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த வீரர்களுடன் போட்டியிட்டார். இந்த போட்டியில் சரத்ராஜ் வெண்கல பதக்கம் வென்றார். இதையடுத்து நேற்று உத்திரமேரூர் வந்த சரத்ராஜை உத்திரமேரூர் பகுதியை சேர்ந்த பொது மக்கள் மாலை அணிவித்து மேளதாளங்கள் முழங்க ஆரவார வரவேற்ப்பு அளித்தனர். பின்னர் பஜார் வீதியில் உள்ள வியாபாரிகள் பொது மக்கள் என அனைவரும் ஆசிய அளவில் வெற்றி பெற்ற சரத்ராஜீக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here