ராமநாதபுரம், ஏப். 12-

ராமநாதபுரம் தாமரைக்குளத்தில் அடுப்பாங்கரை கேட்ரிங் நிறுவனத்தை திரைப்பட இயக்குனர் சமுத்திரக்கனி திறந்து வைத்தார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடற்கரை பகுதியில் அமைந்துள்ள தாமரைக்குளத்தில் முன்னாள் தலைவர் சிவலிங்கம் குடும்பத்தினர் நவீன முறையில் அடுப்பாங்கரை கேட்ரிங் என்ற நிறுவனத்தை துவங்கி உள்ளனர். இந்த கேட்டரிங் நிறுவனம் மாவட்டத்தில் எந்த பகுதியானாலும் சென்று வீட்டு விசேஷங்கள், திருவிழாக்கள், கோயில் விசேஷங்கள் என அனைத்துவித விசேஷங்களுக்கும் சைவ மற்றும் அசைவ உணவு வகைகளை மிகவும் ருசியுடன், உயர்தரமான வகையில் சமைத்து விசேஷங்கள் நடைபெறும் இடத்திற்கே கொண்டு சென்று வினியோகம் செய்யும் வகையில் அடுப்பாங்கரை கேட்ரிங் துவங்கி உள்ளனர். இவர்களின் தனிசிறப்பு சைவ அசைவ உணவுகள் தயாரித்தல், விசேஷங்களுக்கு தேவையான பலகாரங்கள் தயாரித்தல், திருமண மணபந்தல், நவீன முறையில் விளம்பர போர்ட் வைத்தல் என அனைத்து பணிகளையும் ஒரே கூரையின் கீழ் செய்து தருகின்றனர்.

தாமைரக்குளத்தில் நிறுவப்பட்டுள்ள அடுப்பாங்கரை கேட்டரிங் நிறுவனத்தை திரைப்பட இயக்குனர் சமுத்திரகனி, நடிகர் நமோ நாராயணன், அடுப்பாங்கரை கேட்டரிங் உரிமையாளர் ஹேமா தண்டபாணி, திரைப்பட இயக்கனரும் நடிகருமான தண்டபாணி, ராமநாதபுரம் பிரபல தொழிலதிபர் சசிகுமார், தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் ஞானசேகரன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் திறந்துவைத்து வாழ்த்துக்களை வழங்கினர். விழாவில் பங்கேற்ற அனைவரையும் உரிமையாளர் ஹேமா தண்டபாணி வரவேற்றார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here