தஞ்சாவூர், மார்ச். 08 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு

தஞ்சாவூர் மாவட்டம், மனோஜிப்பட்டியை சேர்ந்தவர் பேரரசி மேலும் அவர் தஞ்சாவூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த 2016 ஆம்  ஆண்டு லால்குடியை சேர்ந்த சசிகுமார் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது.

அத்தம்பதிக்கு ஆறு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் அவரது கணவர் கடந்த நான்கு ஆண்டுகளாக சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.

மேலும் கடந்த 5 ஆம் தேதி வீடியோ கால் மூலம் தனது கணவருடன் பேரரசி பேசியுள்ளார். இந்நிலையில் 6 ஆம் தேதி கணவர் பணி புரிந்த நிறுவனத்தில் இருந்து வந்த அழைப்பில் உங்கள் கணவர் இறந்து விட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் எந்த காரணமும் தெரிவிக்காமல் அழைப்பையும் உடனடியாக துண்டித்தாக பேர ரசி தெரிவிக்கிறார். இந்நிலையில் நேற்று மீண்டும் அழைத்து உங்கள் கணவரின் உடல் அழுகிய நிலையில் உள்ளதால் உடலை இந்தியாவிற்கு அனுப்ப இயலாது என கூறி உள்ளனர். எனவே தனது கணவரின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும், மேலும் தனது கணவரின் உடலை மீட்டு தர வேண்டும் என்பதை வலியுறுத்தி :தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரிடம் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும் கணவர் பணிபுரிந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு கேட்டால் முறையான தகவல் தர‌மறுக்கிறார்கள் என அவர் மேலும் புகார் தெரிவிக்கிறார்.

 

பேட்டி.பேரரசி தஞ்சாவூர்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here