பொன்னேரி, ஏப். 10 –
பொன்னேரி அருகே உள்ள காஞ்சிவாயல் பிரதான சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மூதாட்டி மீது மோதி விபத்து ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே காஞ்சிவாயல் பிரதான சாலையில் இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. பழவேற்காட்டில் இருந்து பொன்னேரிக்கு காவல் பட்டி கிராமத்தை சேர்ந்த பார்த்திபன் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் வேகமாகச் சென்று கொண்டிருந்த போது, சாலையில் சென்ற மூதாட்டி மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இதன் காரணமாக மூதாட்டியும் பார்த்திபனும் சம்பவ இடத்தில் படுகாயத்துடன் விழுந்து கிடக்கும் போது அவ்வழியாக சென்றவர்கள் அவசர ஊர்தி வாகனத்திற்கு அளித்த தகவலின் பேரில் 108 அவசர ஊர்தி விரைந்து வந்து இருவரையும் ஆபத்தான நிலையில் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.