கும்பகோணம், டிச. 18 –
கும்பகோணம் அருகே பாபநாசம் தாலுக்கா கணபதி அக்ரஹாரம் கடைத்தெருவில் கும்பகோணத்திலிருந்து கபிஸ்தலம், கணபதி அக்ரஹாரம் வழியாக அய்யம்பேட்டை வரை தமிழக அரசு நகர பேருந்தை இயக்க வலியுறுத்தி மாபெரும் சாலை மறியல் போராட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) சார்பில் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் பாபநாசம் ஒன்றிய செயலாளர் செல்லதுரை, மாதர் சங்க ஒன்றிய செயலாளர் விஜயாள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப் போராட்டத்தினால் கும்பகோணம் திருவையாறு சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை அதிகாரிகள், காவல்துறை மற்றும் வருவாய் துறையினர் விரைந்து வந்து போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
பேட்டி..
மாவட்ட செயலாளர் கண்ணையன்…