நன்னிலம், டிச. 05 –
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தொகுதிக்குட்பட்ட குடவாசல் அதிமுக வடக்கு ஒன்றியத்தின் சார்பில் ஒன்றிய செயலாளர் இராஜேந்திரன் தலைமையில் எரவாஞ்சேரி கிழக்கு கடைவீதியிலிருந்து புறப்பட்டு இரண்டு கிலோ மீட்டர் தூரம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திருஉருவ படத்தை கையில் ஏந்தியபடி மௌனமாக சென்ற ஊர்வலம் எரவாஞ்சேரி மேலகடை வீதியில் நிறைவுபெற்றது.
மேலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். உடன் அ.தி.முக.பிரமுகர்கள், மகளிர் அணியினர் என திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் திருவாரூர் நகரம் நன்னிலம் மன்னார்குடி நீடாமங்கலம் வலங்கைமான் ஆகிய ஒன்றிய நகரம் சார்பில் ஊர்வலம் மற்றும் ஜெயல லிதாவின் திருஉருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி புகழ் அஞ்சலி செலுத்தினார்கள்.
இதில் ஒன்றிய செயலாளர் இராஜேந்திரன் புகழஞ்சலி செலுத்தியுடன் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாண்டிச்சேரி உட்பட நாற்பது தொகுதிகளிலும் வெற்றி பெற்று அம்மாவிற்கு அவ்வெற்றியை காணிக்கையாக செலுத்துவோம் என தொண்டர்கள் மத்தியில் உரை நிகழ்த்தினார்.