pic file copy

திருவள்ளூர் செப் 08 – 

திருவள்ளூர் மாவட்டத்தில் வசித்து வரும் பழங்குடியினருக்கு பல ஆண்டுகளாக நிலுவையிலுள்ள சாதி சான்று மற்றும் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கக்கோரி  திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது.  

தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.தமிழ் அரசு தலைமை தாங்கினார்.

போராட்டத்தில் நிலுவையிலுள்ள சாதி சான்று மற்றும் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கக்கோரி  கோஷங்களை எழுப்பி காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து சங்கத்தின் மாநில தலைவரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான பி.டில்லிபாபு கண்டன உரையாற்றினார். இதில் விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஜி.சம்பத், மாவட்ட பொருளாளர் குமரவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் பழங்குடியினருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், சாதி சான்றிதழ்கள் வழங்க கோரி 
மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸிடம் மனு அளித்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here