கும்பகோணம், செப். 06 –

கும்பகோணம் அருகே உத்திரை கிராமத்தில் நூறு நாள் வேலைக்கு செல்லும் போது, தென்னை மரத்தில் இருந்த கதண்டு வண்டு,   திருப்புறம்பயம் கண்ணுக்குடி தெருவை சேர்ந்த ராமலிங்கம் மனைவி கோகிலா ரவிச்சந்திரன் மனைவி மகாலட்சுமி நடேசன் மனைவி நவநீதம் ஆகிய மூன்று பேரையும் சுற்றி சுற்றி வந்து கொட்டியதில் தலை மற்றும் கை கண்களில் காயம் ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து அவர்கள் மூவரையும், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்ந்து இப்பகுதிகளில் பெருகிவரும் கதண்டுகளை அப்புறப்படுத்த அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து சுவாமிமலை காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here