கும்பகோணம், மார்ச். 17 –

கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தில் திருக்கயிலாய பரம்பரைத் தருமை ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி உடனாகிய ஸ்ரீ கம்பஹரேஸ்வரர் சுவாமி திருக்கோவிலில் உருத்திரபாதத் திருநாள் விழா கடந்த 8ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது.

9ஆம் தேதி பெரிய கொடியேற்றமும், அதனை தொடர்ந்து தினமும் காலை, மாலை பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலாவும் நடைபெற்றது. 13ஆம் தேதி வெள்ளி ரிஷப வாகனத்தில் சகோபுர தரிசனமும், 14ஆம் தேதி காமதேனு வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. 15ம் தேதி திருக்கல்யாணமும், மறுநாள் ரதாரோகணமும் நடைபெற்றது.

இன்று, முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நடைப்பெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here