காஞ்சிபுரம், மார்ச். 13 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்

போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு கருப்பு சட்டை மற்றும் பேஜ் அணிந்து அதிமுகவினர் நடத்திய மிகப் பிரமாண்டமான மனித சங்கலி போராட்டம்.

போதை பொருள் புழக்கத்தை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் இன்று மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என்று அக் கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

அதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் பல்வேறு இடங்களில் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பேருந்து நிலையம் வெளியே முன்னாள் அமைச்சர் வி. சோமசுந்தரம் தலைமையில் 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் பேருந்து நிலையத்திலிருந்து மூங்கில் மண்டபம் வரை சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் அதிமுக வினர் கருப்பு சட்டை மற்றும் பேஜ் அணிந்து கொண்டும் போதை பொருள் புழக்கத்தை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்.

மனித சங்கிலியில் போதை பொருள் தடுப்பு குறித்தும், தமிழக அரசை கண்டித்தும் பதாகைகளை ஏந்தியவாறு  தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை தொடர்ந்து எழுப்பி மனித சங்கிலியில் ஈடுபட்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here