மீஞ்சூர், ஏப். 30 – 

மீஞ்சூர் ஸ்ரீசந்திரபிரபு ஜெயின் கல்லூரியின் 21 வது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு பரிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் உள்ள ஸ்ரீ சந்திரபிரபு ஜெயின் கல்லூரியின் 21 வது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நிகழ்ச்சி கல்லூரியின் வளாகத்தில் நடைபெற்றது.

விழாவிற்கு கல்லூரியின் செயலர் லலித்குமார் ஓ ஜெயின் தலைமை வகித்தார். கல்லூரியின் துணை முதல்வர் பேராசிரியர் சுஜாதா  வரவேற்புரை நல்கினார். முதல்வர் நாகஜோதி ஆண்டறிக்கையை வாசித்தார். உடற்கல்வி இயக்குனர் தனஜெயகரன் விளையாட்டு அறிக்கை வாசித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்ட மீஞ்சூர் ஒன்றியக் குழுப் பெருந்தலைவர் அத்திப்பட்டு ஜி.ரவி வாழ்த்துரை வழங்கி விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.

கல்லூரி இணைச்செயலர் சுரேஷ் ரத்தோட்,கமிட்டி உறுப்பினர் இட்டேந்திர முனோத் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். இதில் ஏராளமான கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here