தேனி, பெரியகுளம் கோட்டாட்சியர் பங்களாவில் இன்று காலை அங்கு பணிப்புரிந்து வரும் பெண் வீட்டுக்கு பின் புறமாக உள்ள தோட்டத்தில் கீரை பறிப்பதற்காக சென்ற பொழுது இரண்டு பாம்பு இருந்ததை கண்டு சத்தம் போட அருகில் இருந்தவர்கள் பாம்பை பிடிப்பதற்காக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உடனடியாக. தீயணைப்புத்துறை குழுவினர் கோட்டாட்சியர் இல்லத்திற்கு விரைந்து வந்தனர். பின்பு ஒளிந்திருந்த பாம்புகளை தேடினார்கள்
அப்போது செடி களுக்குள் ஒளிந்து இருந்த இரண்டு பாம்புகளில் ஒன்று அங்கிருந்து சீறிப் பாய்ந்து தப்ப முயன்றது . தப்ப முயன்ற பாம்பு ஒன்றை லாவகமாக விரட்டி சென்று தீயணைப்பு துறையினர் பிடித்தனர் பின்பு இன்னொரு பாம்பை தேடிய பொழுது பக்கத்தில் இருந்த பொந்துக்குள் ஒளிந் திருந்த பாம்பு அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக, மின்னல் வேகத்தில் ஓட முயன்றது அப்போது தீயணைப்புத் துறை இளைஞர்கள் பாய்ந்து சென்று இந்த பாம்பை தனது கையால் பிடித்து தயாராக வைத்திருந்த பைக்குள் அடைத்து வைத்து வனத்துறை காவலர்கள் மூலமாக அருகிலுள்ள மலைப் பகுதிக்குள் கொண்டு சென்று விட்டார்கள். பாம்புகளை உயிருடன் பிடித்து பாதுகாப்பாக வனத்துக்குள் கொண்டு சென்று விட்ட பெரியகுளம் தீயணைப்புதுறை காவலர்களை அப்பகுதி பொதுமக்கள் பெரிதும் பாராட்டினார்கள் .