திடீரென கூடுவாஞ்சேரி சுற்று வட்டார பகுதியில் பெய்த மழை ... மகிழ்ச்சியில் அப்பகுதி மக்கள்

செங்கல்பட்டு, மே. 17 –

செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் திடீரென பெய்த ஆலங்கட்டி மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த சில நாட்களாக கடுமையான வெப்பம் வாட்டி வதைத்து வந்த நிலையில், திடீரென பெய்த மழையால் வெப்பம் நீங்கி குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

மேலும், கூடுவாஞ்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான நந்திவரம், சீனிவாசபுரம், கோவிந்தராஜபுரம், நாராயணபுரம், காயரம்பேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது அதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here