மேலக்கொட்டையூர், ஜன. 09 –

கும்பகோணம் அருகை உள்ள மேலக்கொட்டையூர் ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தின் மார்கழி திருவிழாவை முன்னிட்டு நேற்று நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ கொப்பரை,  பால்குடம் காவடி, அலகு காவடி எடுத்துக் கொண்டு, கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக சென்ற நிகழ்ச்சி நடைப்பெற்றது.

மேலக்கொட்டையூர் ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் நடைப்பெறும், மார்கழி திருவிழாவை முன்னிட்டு நேற்று கணபதி ஹோமம் அதனை தொடர்ந்து அம்மனுக்கு  காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி சிறப்பு மண்டகப்படி நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலும் மார்கழி திருவிழாவான இத்திருவிழா ஆண்டுதோறும் இவ்வாலயத்தில் நடைபெறுவது வழக்கமாகும். இந்நிலையில் தொடர்ந்து கொரோனா தொற்றால் நடைப்பெறாமல் இருந்த இவ்விழா, இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, இவ்வாண்டு மார்கழி  திருவிழாவையொட்டி  மாவிளக்கு பூஜை  பூச்சொரிதல் விழா நடைபெற்று முக்கிய நிகழ்ச்சியாக நேற்று புறவழிச்சாலையில் காவேரி கரையிலிருந்து கொட்டும் மழையில் நாதஸ்வர மேளதாளங்கள் தாரை தப்பட்டையுடன் பால்குடம்  வேல் சக்தி கரகம் அக்னிசட்டி காவடி அலகு காவடி எடுத்து முக்கிய வீதி வழியாக வந்து கோவிலை வந்தடைந்தது. தொடர்ந்து  மாரியம்மன்க்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சந்தன காப்பாலங்காரமும், அம்மனுக்கு கஞ்சி வார்த்தலும், வெகு விமர்சையாக நடைபெற்றது.  தொடர்ந்து இரவு 7 மணி அளவில் ஸ்ரீ அழகு நாச்சியம்மன் உற்சவர் ரிஷப வாகனத்தில் பதினெட்டாம்படி கருப்புசாமி வேலு ஸ்ரீ மாரியம்மன் சக்தி கரகமும் சக்தி கரகமும் மேளதாளம் முழங்க இன்னிசைக் கச்சேரியுடன் வீதி உலா நடைபெறுகிறது.

மேலும் இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் கிராம நாட்டாமைகள் ஊர் பஞ்சாயத்தார்கள் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here