மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ, மாணவிகள் 2021-22-ம் கல்வி ஆண்டிற்கான புதியது கல்வி உதவித்தொகையைப் பெற விருப்பமானவர்களும், தகுதியானவர்களும் விண்ணப்பிக் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
செய்தி சேகரிப்பு இராம மூர்த்தி
திருவண்ணாமலை ஆகஸ்டு 17 –
மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ, மாணவிகள் 2021-22-ம் கல்வி ஆண்டிற்கான புதியது கல்வி உதவித் தொகை விண்ணப்பித்தல்;
தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற் படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகளின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 இலட்சத்திற்கு மிகாமல் உள்ள மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித் தொகையாக மாணவர் ஒருவருக்கு ஆண்டிற்கு அதிகப் பட்சம் ரூ.2.00 இலட்சம் வரை வழங்குவதற்கு தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.
மேற்படி கல்வி உதவித் தொகைக்கு 2021-22-ம் ஆண்டில் புதியது விண்ணப்பிப்பிக்க விரும்பும் தகுதியான மாணவர்கள் கீழ்கண்ட முகவரியிலுள்ள இயக்ககத்தையோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களை அணுகியோ அல்லது கீழ்க் குறிப்பிட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பம் அனுப்பக்கோரி விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் மேற்படி 2021-2022-ம் நிதியாண்டிற்கான புதியது கல்வி உதவித்தொகை விண்ணப்பத்தினை மாணவர்கள் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தினை பரிந்துரை செய்து இயக்குநர், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், எழிலகம் இணைப்பு கட்டடம், 2-வது தளம், சேப்பாக்கம், சென்னை-5. தொலைபேசி எண்.044-28551462, மின்னஞ்சல் முகவரிக்கு பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 30.11.2021-க்குள் அனுப்பி வைக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.