ராமநாதபுரம், ஆக. 10- மாணவ மாணவிகள் கல்வி அறிவுடன் சமூக அக்கறையினையும் வளர்த்து கொள்ள வேண்டும், என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் பேசினார்.
ராமநாதபுரத்தில் பள்ளிக்கல்வி துறை மற்றும் பத்மராஜம் கல்விக் குழுமம் ஒருங் கிணைந்து பள்ளி  மாணவ மாணவியர் களுக்கா வெற்றி மேல் வெற்றி என்ற தலைப்பில் விழிப்புணர்வு வழிகாட்டும் நிகழ்ச்சி நடத்தினர். இந் நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவராவ் தலைமை வகித்து பேசியதாவது:
தமிழ்நாடு அரசு மாணவ மாணவியர்கள் நலனுக்காக பள்ளிக் கல்வி துறையின் மூலம் பல்வேறு நலத் திட்டங்களை செயல் படுத்தி வருகிறது. அந்த வகையில், மாணவ மாணவியர் களுக்கு தன்னம் பிக்கையினை மேம் படுத்திடும் வகையிலும், தங்களது எதிர்காலம் குறித்து தெளிவான சிந்தனையை ஏற்படுத்திட உறுதிணை புரியும் வகையிலும் பத்மராஜம் கல்வி குழுமம் என்ற தனியார் அமைப்புடன் ஒருங் கிணைந்து இந்த விழிப் புணர்வு வழி காட்டுதல் நிகழ்ச்சி நடத்தப் படுகின்றது.
2018-19
ம் கல்வி யாண்டில் நடைப் பெற்ற 10ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் அரசு பள்ளிகளின் தேர்ச்சியில் ராமநாதபுரம் மாவட்டம் மாநில அளவில் முதல் இடத்தையும், அனைத்து பள்ளிகளின் தேர்ச்சியில் மாநில அளவில் இரண்டாம் இடத்திலும் உள்ளது. மாணவ மாணவியர்கள் கல்வி அறிவோடு நல் லொழுக்கத்தையும் சமூக அக் கறையினையும் வளர்த்திட வேண்டும். தங்களது எதிர்கால வளர்ச்சிக்காக தங்களுக்கு விருப்பமான எந்த துறையினை தேர்வு செய்தாலும் நல்லொழுக்கம், கடின உழைப்பு என்ற இரண்டு பண்புகளே உங்கள் வெற்றிக்கு வழி வகுக்கும்.
நமது தேசத்தின் முன்னாள் குடியரசு தலைவர் பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் பிறந்து உலகம் போற்றும் வகையில் உயர்ந்துக் காட்டியவர். அவரது வாழ்க்கையினை பாடமாக கொண்டு மாணவ மாணவியர்கள் தங்களது வாழ்க்கையில் முன்னேற அயராது உழைத்திட வேண்டும். அதே வேளையில் சமூக அக் கறையுடன் மரக்கன்று நடுதல், மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்துதல் போன்ற நற் காரியங்களிலும் தங்களை ஈடுபடுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் பேசினார்.
நிகழ்ச்சியில் நான்காம் தமிழ்சங்கம் தலைவர் ராஜா குமரன் சேதுபதி, மதுரை செந்தமிழ் கல்லூரி செயலாளர் ராணி லட்சுமி குமரன் சேதுபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ராமநாதபுரம் மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) முத்துசாமி, பத்மராஜம் கல்விக்குழுமம் தலைவர் பாலன் உட்பட பலர் பங்கேற்றனர். 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here