திருவாரூர், ஆக. 7-

திருவாரூரில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் வடுகநாதன், ராஜலட்சுமி, ஜெயசீலி, முத்துலட்சுமி, விமலா, கமலா, சுபா ஆகியோருக்கு பணி நிறைவு பாராட்டு விழா, குஜராத்தில் நடைபெற்ற அகில இந்திய மாநாட்டில் கலந்து கொண்ட இயக்க நிர்வாகிகள் ஐயப்பன், கிருபாராணி, சேவியர் ரேமண்ட், ஜெயந்தி, ஹேமாவதி, நிர்மலாதேவி, கவிதா ஆகியோருக்கு பாராட்டு, உலகத் தமிழாசிரியர் மாநாட்டில் கலந்து கொண்ட இயக்க நிர்வாகிகள் ஐயப்பன், கிருபாராணி, மாதவன் ஆகியோருக்கு பாராட்டு உள்ளிட்ட ஐம்பெரு விழா நடைபெற்றது

நிகழ்ச்சிக்கு வட்டாரத் தலைவர் ஐயப்பன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் கூட்டணியின் பொதுச்செயலாளர் ந.ரெங்கராஜன், மாநிலத் தலைவர் மு.லெட்சுமிநாராயணன், மாவட்டச் செயலாளர் ரெ.ஈவேரா ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

மேலும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் ந.ரெங்கராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, கடந்த முப்பது ஆண்டுகளுக்கு முன்பு சத்துணவு திட்டத்தில் இருந்து ஆசிரியர்களை விடுவிக்க வேண்டும் என்று மிகப்பெரிய போராட்டங்களை நடத்தி அதன் மூலம் விடுபட்டு இருக்கிறோம்.

எனவே காலை உணவுத் திட்டத்தில் ஆசிரியர்களையும், தலைமை ஆசிரியர்களையும் ஈடுபடுத்த தமிழக அரசு முயற்சிக்கக் கூடாதென, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்வதாகவும்,

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் நாடாளுமன்றத்தில் அதற்கான சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும். அதனை வலியுறுத்தி அகில இந்திய ஆசிரியர் கூட்டணி சார்பில் வருகின்ற செப்டம்பர் ஐந்தாம் தேதி கன்னியாகுமரி மற்றும் மூன்று திசைகளிலும் சேர்ந்து நான்கு திசைகளிலிருந்து ரத யாத்திரை புறப்பட இருக்கிறது.

பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பங்களிப்பு ஓய்வூதியத்தை மத்திய அரசு எப்படி நாடாளுமன்றத்தில் சட்டத்தை நிறைவேற்றி கொண்டு வந்தார்களோ அதைபோன்று நாடாளுமன்றத்திலேயே சட்டத்தை நிறைவேற்றி அதை நீக்கம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காகதான் நாங்கள் ரத யாத்திரை மேற்கொள்ள இருக்கிறோம்.

மாபெரும் ரத யாத்திரையை ஆசிரியர் தினமான செப்டம்பர் 5ல் கன்னியாகுமரியில் தொடங்கி புது டெல்லி வரை சென்று உலக ஆசிரியர் தினமான அக்டோபர் ஐந்தாம் தேதி மாபெரும் மாநாட்டினை புது டெல்லியில் நடத்தவிருக்கிறோம்.

தமிழக அரசின் 309 ஆவது தேர்தல் வாக்குறுதியாக ஆட்சிப் பொறுப்பேற்றுடன் பங்களிப்பு உதயத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருவோம் என்று அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்கள். அந்த வாக்குறுதியை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.  சமீபத்தில் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அனைத்து சங்கங்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி கொடுத்தார். இதுவரை எந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை நீக்குவது தொடர்பான குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவிடமும், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி புள்ளி விவரங்களோடு கருத்து பதிவு செய்துள்ளது இதுவரை டேனியல் ஆசிரியர் ஊதிய முரண்பாடு நீக்கப்படவில்லை உடனடியாக இதற்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும். ஆசிரியர்களை துன்புறுத்தக்கூடிய வகையில் எமிஸ் வலைதளத்தில் பல்வேறு புள்ளி விவரங்களை அவ்வப்போது அப்டேட் செய்ய வேண்டும் என்று கருத்தை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. அதனால் ஆசிரியர்கள் பல்வேறு மன உளைச்சலுக்கு ஆளாகி விருப்ப ஓய்வு பெற்று செல்லக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். கற்றல் கற்பித்தல் பணி பள்ளியிலே பாதிக்கப்பட்டு இருக்கிறது. எனவே இந்த பணியினை படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

இவற்றையெல்லாம் நிறைவேற்றவில்லை என்றால் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில பொதுக்குழு கூடி விரைவில் போராட்டத்தை அறிவிக்கும் என தெரிவித்துக் கொள்கிறேன். அரசு பள்ளிகளில் வழங்கப்பட்டு வரும் காலை உணவுத் திட்டம் உள்ளிட்ட அனைத்து நலத்திட்ட உதவிகளையும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும். அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்குவது போல் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் படித்த மாணவ மாணவிகளுக்கும் சலுகை விரிவுபடுத்த வேண்டும். அதுப்போன்று 2189 பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டு மூன்று மாத காலம் ஆகியும் இதுவரை புத்தகங்கள் வழங்கப்படவில்லை எனவும், மேலும் உடனடியாக புத்தகங்களை வழங்க வேண்டும். அதேபோன்று தமிழக அரசு முன்னாள் மாணவர்கள் குழுவை உருவாக்கி அதையும் அப்டேட் செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். முன்னாள் மாணவர்கள் பட்டியலை மட்டுமே ஆசிரியர்கள் தயார் செய்ய முடியும். அப்பேட் செய்வது போன்ற விஷயங்களை தமிழக அரசு தனியாக ஊழியர்கள் நியமித்து செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு ந.ரெங்கராஜன் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாநில துணைச் செயலாளர் ஜூலியஸ், மாவட்டத் தலைவர் முருகேசன், மாவட்டப் பொருளாளர் சுபாஷ், மாநில செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, மாநில பொதுக்குழு உறுப்பினர் செல்வமணி, மேனாள் மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் காந்தி, பள்ளி நிர்வாகிகள் சங்க பொறுப்பாளர் பன்னீர்செல்வம், மாவட்ட துணை நிர்வாகிகள் அன்பழகன், கலைச்செல்வன், வட்டாரச் செயலாளர்கள் மன்னார்குடி பாலகிருஷ்ணன், நீடாமங்கலம் தமிழரசன், நன்னிலம் பிரகாஷ், திருத்துறைப்பூண்டி அரிகிருஷ்ணன், கோட்டூர் பாரதி, கொரடாச்சேரி சந்திரமோகன், வவங்கைமான் சரவணகுமார், நகரச் செயலாளர்கள் மன்னார்குடி மார்ட்டின் வஜ்ரசிங், திருவாரூர் நாகராஜன், வட்டாரத் தலைவர்கள் முத்துப்பேட்டை சரவணன், நீடாமங்கலம் தர்மராஜ், திருத்துறைப்பூண்டி வேதாரத்தினம், கோட்டூர் தங்கபாபு, வலங்கைமான் பாலசுந்தரம், நகரத் தலைவர்கள் மன்னார்குடி செல்வராஜ், திருவாரூர் கிருஷ்ணகுமார், வட்டாரப் பொருளாளர்கள் முத்துப்பேட்டை சுரேஷ், மன்னார்குடி ரமேஷ்குமார், நீடாமங்கலம் சோழன், நன்னிலம் ஜெயசீலன், வலங்கைமான் ராஜாராமன், திருவாரூர் நகரம் உண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக திருவாரூர் வட்டாரச் செயலாளர் வேதமூர்த்தி வரவேற்றார். இறுதியில் வட்டாரப் பொருளாளர் ராஜசேகர் நன்றி கூறினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here