இராமநாதபுரம், அக். 9 –

இராமநாதபுரம் அரண்மனை வளாகத்தில், மன்னர் சேதுபதி பனைத் தொழில்கள் கல்லூரி சார்பில் பனை மரப்பழம் பயன்பாடு தொடர்பான பயிற்சி வகுப்பு நடைப்பெற்றது. அதனை இராஜாகுமரன் சேதுபதி குத்து விளக்கேற்றி வைத்து தொடங்கி வைத்தார்.

இராணிலெட்சுமி தலைமையில் நடைப்பெற்ற இந்த
பனைமரப் பழத்தின் பயன்கள் தொடர்பான இப் பயிற்சி வகுப்பில் பனை மரத்தில் இருந்து வரும் பனை  பழத்தின் மூலம் குழிப் பனியாரம், சாக்லேட் போன்ற இனிப்பு பொருட்கள் தயார் செய்வது , லேகியம் தயாரிப்பது போன்ற பயிற்சி வழங்கப்பட்டது.

 இராஜா குமரன் சேதுபதி பனை மர தொழில்கள் கல்லூரி சார்பில் பயிற்சி அலுவலர்கள் கலந்து கொண்டு சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர்.

கல்லூரி சார்பில் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருள்களை கல்லூரி சேர்மன் இராணி இலட்சுமி நாச்சியார், டைரக்டர் டாக்டர் மகாலட்சுமி நாச்சியார் ஆகியோர் அறிமுகம் செய்து வைத்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here