ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி நிர்வாக குழு உறுப்பினர் பதவி தேர்தலுக்கான வேட்புமனுதாக்கல் துவங்கியது.

ராமநாதபுரம் வண்டிக்கார தெருவில் அமைந்துள்ள ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமை அலுவலகத்தில் தேர்தல் அலுவலரான துணைப்பதிவாளர் வெங்கடாசலபதியிடம் அதிமுக கட்சியிலிருந்து பலர் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதில் மாவட்ட செயலாளர் முனியசாமி, ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் முன்னாள் தலைவர் ஜெயஜோதி, முன்னாள் மாவட்ட செயலாளர் தர்மர், அரசு தலைமை மருத்துவுமனை டாக்டர் மலையரசு, முன்னாள் கவுன்சிலர் செல்வராணி உட்பட பலர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர்.

வேட்பாளர் இறுதிபட்டியல் பிப்.25ம் தேதி தேர்தல் அலுவலர் வெளியிடுவார். தேர்தல் மார்ச் 1ம் தேதி நடைபெற உள்ளது. தலைவர் மற்றும் துணை தலைவர் தேர்தலுக்கான கூட்ட அறிவிப்பு மார்ச் 2ம் தேதி அறிவிக்கப்படும். மார்ச் 6ம் தேதி காலை 10 மணிக்கு தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் என தேர்தல் அலுவலர் வெங்கடாசலபதி தெரிவித்தார். அதிமுக சார்பில் பன்முனை போட்டி உள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here