டெல்லியில் சபியா பெண் காவல் அதிகாரியை பாலியல் வன்புணர்வு செய்து கொடூரமான முறையில் கொலை செய்த உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரி இராமநாதபுரத்தில் தமுமுக ஆர்ப்பாட்டம் நடத்தியது .
இராமநாத புரம். செப் 8 –
டெல்லி மாநகரம் டெல்லி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவல் அதிகாரியாக கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பணியில் சேர்ந்த சபியா என்ற பெண் அதிகாரியை பல நபர்கள் சேர்ந்து பாலியல் வன்புணர்வு செய்து 50க்கும் மேற்பட்ட இடங்களில் படுகாயங்களுடன் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார்
இந்தக் கொடூரக் கொலை சம்பந்தமான குற்றவாளிகளை டெல்லியில் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள காவல்துறை இந்த கொடூர கொலை செய்த உண்மை குற்றவாளிகளை இதுவரை கைது செய்யவில்லை
இதை கண்டிக்கும் விதமாக இராமநாதபுரம் மாவட்ட தமுமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இராமநாதபுரம் அரசு பணிமனை அருகில் இன்று 8/9/2021 காலை 10 மணி அளவில் தமுமுக இராமநாதபுரம் மத்திய மாவட்ட தலைவர் சரிப் தலைமையில் மேற்கு மாவட்ட தலைவர் முஹம்மது இக்பால், கிழக்கு மாவட்ட தலைவர் பட்டாணி மீரான் முன்னிலையில் நடைபெற்றது
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமுமுக மாநிலச் செயலாளர்கள் சலிமுல்லாகான், சாதிக் பாட்சா, மமக மாநில அமைப்புச் செயலாளர் ஹுசைன் கனி மாநில இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை செயலாளர் மௌலவி அப்துல் காதர் மன்பயீ, உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள்
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் இராமநாதபுரம் மாவட்ட தமுமுகவில் இருந்து 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் இராமநாதபுரம் மத்திய மாவட்டம் கிழக்கு மாவட்டம் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய நிர்வாகிகள் பேரூர் நிர்வாகிகள் கிளை நிர்வாகிகள் என அனைத்து நிர்வாகிகளும் பங்கெடுத்தனர்
இறுதியாக நன்றியுரை இராமநாதபுரம் நகர் தமுமுக மமக தலைவர் அப்துல் ரஹீம் அவர்கள் கூறினார்கள்
இறுதியாக கண்டனத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன அதில்
தீர்மானம் 1
டெல்லி மாநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவல் அதிகாரியாக பணியாற்றிய சபியா என்ற பெண்ணை கொடூரமாக கொலை செய்த உண்மை குற்றவாளியை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி காவல்துறை விரைந்து கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
தீர்மானம் 2
தமிழக மாணவர்களின் கல்வியைக் கானல் நீராக்கும் நீட் தேர்வை இரத்து செய்வதற்காக தமிழக அரசு முனைப்புக் காட்டுவது பாராட்டிற்குரியது இருப்பினும் ஒன்றிய அரசு வரும் 12ஆம் தேதி நீட் தேர்வை நடத்தவுள்ளது. கடந்த ஆண்டுகளில் நீட் தேர்வின் போது தேர்வுக்கு முன் திருடர்களை நடத்துவது போல் மாணவர்களை சோதனை என்ற பெயரில் மனதளவில் சோர்வடையச் செய்ததை நாம் அறிவோம். இதனால் மாணவர்களின் கவனம் சிதறி பலர் தேர்வில் கவன செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதுபோன்ற ஒரு மோசமான சூழல் இவ்வாண்டு நடைபெறாமல் இருக்க தமிழக அரசு ஆவண செய்யவேண்டும் என்று இக்கூட்டத்தின் வாயிலாகக் கேட்டுக்கொள்கிறேன்.