பொன்னேரி, டிச. 16 –

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலையோரம் வியாபாரம் செய்து வரும் வியாபாரிகளுக்கு, தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் நவீன கடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

அந்நிகழ்வில் பங்கேற்ற பொன்னேரி நகராட்சி தலைவர் டாக்டர். பரிமளம் விஸ்வநாதன், மற்றும் பொன்னேரி நகராட்சி ஆணையர் கோபிநாத் ஆகியோர் முன்னிலையில் 20 க்கும் மேற்பட்ட வியாபாரிகளுக்கு நவீன கடைகளை ஒதுக்கீடு செய்து அதற்கான ஆணைகளை  வழங்கினார்கள்.

அந்நிகழ்வின் போது நகராட்சி கவுன்சிலர்கள் உமாபதி, கவிதா, பத்மா, மணிமேகலை, அசரப்முணிஷாசகில், சமுக ஆர்வலர் பாலச்சந்தர், உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here