திருவள்ளூர், செப். 08 –

திருவள்ளூர் மாவட்டம் பெரிய ஓபுளாபுரம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் செவ்வந்தி மனோஜ் ஏற்பாட்டில் தோட்டக்கலை சார்பாக கடந்த 2020 – 2021 ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட எட்டு ஊராட்சிகளை சேர்ந்த 500 விவசாயிகளுக்கு எட்டு வகையான (வரப்பு பயிர்) பழ வகை செடிகளை தோட்டக்கலை அலுவலர் திவ்யா மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர் விக்னேஷ் ஆகியோர் வழங்கினார்கள்.

அதேபோல் வேளாண் அலுவலர் நவீன் பிரசாத், உதவி வேளாண் அலுவலர் ஆனந்தராஜ் ஆகியோர் வேளாண் துறை சார்பாக விவசாயிகளுக்கு நபர் ஒருவருக்கு இரண்டு தென்னை கன்றுகள் வீதம் 300 விவசாயிகளுக்கு 600 தென்னை மரக்கன்றுகளை வழங்கினார்கள்.

இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் இன்பவள்ளி கஜேந்திரன், வார்டு உறுப்பினர்கள் சின்ன ஓபுளாபுரம் சீனு, சிவகாமி, குமரகுரு, ரேகாபழனி மற்றும் அறிவழகன், நரேந்திரன் ஆகிய திமுக நிர்வாகிகளும் ஊராட்சி செயலாளர் குருமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here