பூந்தமல்லி, ஏப். 06 –

பூந்தமல்லியில் குடிபோதையில் தாயிடம் தகராறு செய்த அண்ணனை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்த தம்பிகள் 2 பேரை போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

பூந்தமல்லி அடுத்த கன்டோன்மென்ட் ரைட்டர் தெருவைச் சேர்ந்தவர் கணேஷ் (40), குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர் மனைவியை பிரிந்து இவரது தம்பிகள் மணி (35), குமார் (30), மற்றும் தாயுடன் வசித்து வந்தார்.

முன்னதாக, தினமும் குடித்துவிட்டு தனது தாயை ஆபாச வார்த்தைகளால் பேசி தகராறு செய்து வந்துள்ளார் இந்நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தவர் தனது தாயை ஆபசமாக பேசி தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அவரது தம்பிகள் மணி மற்றும் குமார் ஆகிய இருவரும் வீட்டில் இருந்த கத்தி மற்றும் கத்திரிக்கோலையும் எடுத்து தகராறில் ஈடுபட்டு வந்த அண்ணன் கணேசனின் கழுத்தில் குத்தியும் கழுத்தையும் அறுத்துள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்து துடித்துடித்து கணேஷ் சம்பவ இடத்திலேயே இறந்து போனார் இதையடுத்து தம்பிகள் இருவரும் தலைமறைவாகிவிட்டனர்.

இதுகுறித்து பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவல் அறிந்ததும் இன்ஸ்பெக்டர் சிதம்பரம் முருகேசன் தலைமையில் விரைந்து வந்த போலீசார் கொலை செய்யப்பட்டு கிடந்த கணேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து தலைமறைவாக இருந்த அவரது தம்பி குமார் மற்றும் மணி ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். குடிபோதையில் தாயை அவதூறாக பேசி தகராறில் ஈடுபட்ட அண்ணனை தம்பிகள் சேர்ந்து கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here