பேரளம், பிப். 14 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் …

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட பேரளம் அருகே உள்ள நாடாகுடி பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த பாண்டிச்சேரி சாராய பாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்..

பேரளம் அருகே உள்ள நாடாகுடி பகுதியை சார்ந்த சுந்தர் மற்றும் உலகநாதன் ஆகியோர் வீடுகளில் இருந்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட சாராய பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்..

திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஜெயக்குமாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர சோதனை ஈடுபட்டனர்.. அப்போது பாண்டிச்சேரி சாராய பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த சுந்தர் மற்றும் உலகநாதன் வீடுகளில்… பீரோ மற்றும் குப்பை குழிகளில் பதுக்கி வைத்திருந்த சாராய பாட்டில்களை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் முன்னிலையில் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்..

மேலும் சுந்தர் மற்றும் உலகநாதன் ஆகிய இருவரையும் காவல்துறையின் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here