கும்மிடிப்பூண்டி, மே. 03 –

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரிக்கு உட்பட்ட பகுதிகளில் மூன்று பிரசித்திப்பெற்ற முருகன் ஆலயங்களான சிறுவாபுரி, ஆண்டார்குப்பம் அடுத்ததாக பெரும்பேடு ஆகிய பகுதிகளில் முருகன் கோவில்கள் அமைந்துள்ளது. இதில் குழந்தை வடிவில் ஆள் உயரத்தில் நின்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் பிரசித்தி பெற்ற அருள்மிகு பாலகுமாரசுவாமி ஆலயம் ஆகும்.

இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் வரும் கிருத்திகையின் போது விசேஷ அலங்காரங்களுடன் சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். கொரோனா கட்டுப்பாட்டால் இரண்டாண்டுகள் இத்திருவிழா நடைப்பெறாமல் இருந்த நிலையில் தற்போது கொரோனா கட்டுப்பாட்டு தளர்வின் காரணமாக இந்த ஆண்டு நடைப்பெறும், சித்திரை கிருத்திகை விழாவில் திமுக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும்,  கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜே கோவிந்தராஜன் ஆலயத்திற்கு வருகை புரிந்து சுவாமி தரிசனம் செய்தார்.

இந்நிகழ்வில் அவருடன் பொன்னேரி நகராட்சியின் தலைவர் டாக்டர். பரிமளம் விஸ்வநாதன், மீஞ்சூர் வடக்கு ஒன்றிய செயலாளர் சுகுமாரன் சோழவரம் ஒன்றிய கழக செயலாளர் செல்வசேகரன், முன்னாள் பொன்னேரி பேரூராட்சி மன்ற துணை தலைவர் ரவிக்குமார், மீஞ்சூர் தமிழ் உதயன், அண்ணாமலைச்சேரி ஆறுமுகம் பொன்னேரி நல்லசிவம்,மெதூர் சிலம்பரசன், பிரவீன்குமார் உள்ளிட்ட திமுகவினர் பங்கேற்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here