திருவள்ளூர், மார்ச். 05 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்…

மனவளர்ச்சி குன்றியோர், மூளை முடக்குவாதம் போன்ற பல்வேறு வகையிலான உடல் ஊனம் உடையவர்களின் நலன் கருதி நேற்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைப்பெற்ற மக்கள் குறைத் தீர்க்கும் நாள் கூட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட 26 மாற்றுத் திறனாளிகளுக்கு சட்டபூர்வ பாதுகாவலர் சான்றிதழை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில்‌ மாவட்ட ஆட்சியர் மாற்றுத் திறனாளி பயனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

மேலும் அதனைத் தொடர்ந்து மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் மனவளர்ச்சி குன்றியோர், புற உலக சிந்தனை அற்றோர், மூளைமுடக்குவாதம் மற்றும் பல்வகை ஊனம் உடையோரின் நலனுக்காக 18 வயதுக்கு மேற்பட்ட 26 மாற்றுத் திறனாளிகளுக்கு சட்டபூர்வ பாதுகாவலர் சான்றுகளை மாவட்ட ஆட்சியர் பிரபு ஷங்கர் வழங்கினார்.

இந்நிகழ்வில் உதவி பயிற்சி ஆயுஷ் வெங்கட் வதஸ், மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் சீனிவாசன், ஆஷா தொண்டு நிறுவனம் இயக்குனர் சரவணன் ஆகியவர்கள் உடனிருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here