திருவண்ணாமலை அக்.23-

திருவண்ணாமலை நகராட்சி புதிய ஆணையாளராக எஸ்.பார்த்தசாரதி பொறுப் பேற்றார். திருவண்ணாமலை நகராட்சி ஆணையாளராக பணிபுரிந்த இரா.சந்திரா பணியிட மாறுதல் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். அதைத் தொடர்ந்து சிவகாசி நகராட்சி ஆணையாளராக பணியாற்றிய எஸ்.பார்த்தசாரதி திருவண்ணாமலை நகராட்சிக்கு  ஆணையாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டு  திருவண்ணாமலை நகராட்சி அலுவலகத்தில் புதிய ஆணையாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு நகராட்சி பொறியாளர், மேலாளர், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் அலுவலர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here