திருவாரூர், மார்ச். 02 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே,நாகராஜ்

திருவாரூர் மாவட்டம், தனியார் திருமண மண்டபத்தில் ஓஎன்ஜிசி சார்பாக  OBC மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஏழை எளிய மக்களுக்கு  சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் மூலமாக இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன..

இந்த விழாவில் ONGC நிறுவனத்தின் செயல் இயக்குனர் மற்றும் காவேரி மேனேஜர்  உதய பாஸ்வான் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு உதவி பொருட்களை வழங்கினார். மேலும் சிறப்பு விருந்தினராக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார்  கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஏழை எளிய மக்களுக்கு, 12 லட்சத்து 25 ஆயிரத்து 276 ரூபாய் மதிப்பிற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

மாவட்டத்தின் நலிவடைந்த தொழிலாளர்களுக்கு தையல் இயந்திரம், சலவைப் பெட்டி, மூன்று சக்கர வாகனம் ஆகியவை வழங்கப்பட்டது.. மற்றும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு கல்வி உதவித் தொகை மற்றும் கல்வி உபகரணங்களும் வழங்கப்பட்டது.

‌இந்த நிகழ்ச்சியிலே ongc  ஓ பி சி மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டஒ பிசி எம்பிளாயீஸ் நல சங்க நிர்வாகிகள் சேதுபதி மற்றும் சிவசங்கரன் மேலும் பொதுமக்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here