புதுச்சேரி மந்திரிசபையில் புதிய அமைச்சராக திருமுருகன் பதவியேற்பு : துணை நிலை ஆளுநர் பதவிப் பிரமானம் செய்து வைத்தார்
புதுச்சேரி, மார்ச். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்
புதுச்சேரி அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட அமைச்சர் சந்திர பிரியங்காவிற்கு பதிலாக புதிய அமைச்சராக காரைக்கால் வடக்கு தொகுதி எம்எல்ஏ திருமுருகன் இன்று பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதவிப் பிரமாணம் செய்து...
புடாபெஸ்ட்டில் இளையோருக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கங்கள் வென்ற இந்தியக் குழுவுக்கு பிரதமர் வாழ்த்து
பிரதமர் நரேந்திர மோடி, ஹங்கேரி புடாபெஸ்ட்டில் நடைபெற்ற இளையோருக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கங்கள் வென்ற இந்திய அணியினருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில், “நமது விளையாட்டு வீரர்கள் தொடர்ந்து நம்மை பெருமை கொள்ளச் செய்கிறார்கள். ஹங்கேரி புடாபெஸ்ட்டில் நடைபெற்ற இளையோருக்கான உலக சாம்பியன்ஷிப்...
புதுச்சேரி அருள்மிகு ஸ்ரீநவநீதகிருஷ்ணன் திருக்கோயிலில் நடைப்பெற்ற திருத்தேரோட்டம் …
புதுச்சேரி, ஏப். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்…
புதுச்சேரி ஸ்ரீ நவநீதகிருஷ்ணன் திருக்கோவிலின் சித்திரை பிரமோத்சவத்தை முன்னிட்டு அத்திருக்கோயிலில் திருத்தேரோட்டம் நடைபெற்றது. அதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து திருத்தேரினை இழுத்தனர்.
புதுச்சேரி, நெல்லித்தோப்பு தொகுதிக்குட்பட்ட நவீனா கார்டன் பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ நவநீத கிருஷ்ணன்...
பிரதம மந்திரி ராஷ்ட்ரீய பால் புரஸ்கார் விருதாளர்களுடன் நாளை பிரதமர் கலந்துரையாடுகிறார்
புதுதில்லி, ஜன. 23 -
முதல் முறையாக விருதாளர்களுக்கு பிளாக்செயின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி டிஜிடல் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. பிரதம மந்திரி ராஷ்ட்ரீய பால் புரஸ்கார் (பிஎம்ஆர்பிபி) விருதாளர்களுடன் நாளை ( ஜனவரி 24-ந்தேதி ) பிரதமர் நரேந்திர மோடி நண்பகல் 12 மணியளவில் காணொலி வாயிலாக கலந்துரையாடுகிறார்.
2022...
தேசிய அளவில் நீர் மேலாண்மையில் தமிழ்நாடு மூன்றாவது இடம் : ஒன்றிய ஜல்சக்தி துறை அமைச்சகம் ...
சென்னை, மார்ச். 29 -.
ஒன்றிய ஜல்சக்தி துறை அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் தேசிய நீர் விருது வழங்கப்பட்டு வருகிறது. நீர் மேலாண்மையில் சிறப்பாக செயல்படும் மாநிலங்களை இத்துறையின் சிறப்புக் குழு மாநிலம் வாரியாக நேரில் களஆய்வு செய்து, சிறப்பாக செயல்பட்ட மாநிலத்திற்கு 3 விருதுகளும், சிறந்த மாநகராட்சி,...
புதுச்சேரி காராமணிக்குப்பம் அரசுத் தொடக்கப் பள்ளியில் நடைப்பெற்ற ஆசிரியர்களுக்கு கைக் கணினி வழங்கும் விழா : துணைநிலை...
புதுச்சேரி, மார்ச். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்
புதுச்சேரி அரசு பள்ளிக் கல்வி இயக்ககம் சார்பில் தகவல் தொழில்நுட்ப வளத் தொகுப்பின் கீழ், புதுச்சேரியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு இலவச மடிக்கணினி (டேப்லெட்) வழங்கும் நிகழ்ச்சி காராமணிக்குப்பம் பகுதியில் உள்ள ஜீவானந்தம் அரசு ஆண்கள்...
வெகுவாக பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளை பெற்று வரும் புதுச்சேரி திருப்புவனை காவல்துறையினர்….
புதுச்சேரி, ஏப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்...
கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து பொதுமக்களின் தாகம் தீர்க்கும் வகையில் நீர் மோர், மற்றும் தர்பூசினி வழங்கி வரும் திருபுவனை காவல்துறையினர். அவர்களின் சமூதாய அக்கறையை பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் அவர்களை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
https://youtu.be/1aMDH0Itb3c
கோடைகாலம்...
திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆதரவுத் தெரிவித்த சிவசேனா யூ.பி.டி … 2024 நாடாளு மன்றத்...
மயிலாடுதுறை, மார்ச். 19 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா உத்தவ் பாலா சாகேப் தாக்கரே UBT கட்சியின் தேசிய தலைவர் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, இளைஞரணி தலைவர் ஆதித்ய தாக்கரே ஆகியோர் உத்தரவின் படி தேசிய பொதுச்...
எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்குச் சீட்டு முறையைக் கொண்டு வர வேண்டும் : புதுச்சேரி வி.சி.க சார்பில்...
புதுச்சேரி, பிப். 23 -
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் ...
புதுச்சேரி யூனியன் பிரதேசம், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏற்படுத்தும் முறை கேடுகளை தடுத்திட வாக்குச்சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி புதுச்சேரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன மற்றும் கோரிக்கை முழக்கப் போராட்டம்....
54, 439 பேருக்கு மத்திய அரசின் பாராட்டுச் சான்றிதழ் – நிதித்துறை இணையமைச்சர் தகவல்
ஜிஎஸ்டி வரி செலுத்திய மற்றும் குறித்த நேரத்தில் ஜிஎஸ்டி தாக்கல் செய்த 54,439 பேருக்கு பாராட்டு சான்றிதழ்: மக்களவையில் தகவல்
ஜிஎஸ்டி செலுத்தியதில் கணிசமான பங்களிப்பை அளித்தவர்கள், குறித்த நேரத்தில் ஜிஎஸ்டி தாக்கல் செய்த 54,439 பேருக்கு மத்திய அரசு பாராட்டு சான்றிதழ் வழங்கியுள்ளதாக மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்திரி தெரிவித்தார்.
மக்களவையில் அவர் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:
சரக்கு மற்றும் சேவை வரி(ஜிஎஸ்டி) அறிமுகப்படுத்தி 4 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு, ஜிஎஸ்டி செலுத்தியதில் கணிசமான பங்களிப்பை அளித்தவர்கள், குறித்த நேரத்தில் ஜிஎஸ்டி தாக்கல் செய்த 54,439 பேருக்கு மத்திய அரசு பாராட்டு சான்றிதழ் வழங்கியது. தமிழகத்தில் 5589 பேருக்கும், புதுச்சேரியில் 47 பேருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.
மொத்த உணவுதானிய உற்பத்தி 305.44 மில்லியன் டன்னாக அதிகரிக்கும் :
தேசிய புள்ளிவிவர அலுவலகம் வெளியிட்ட 2020-21 ஆம் ஆண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (ஜிடிபி) தற்காலிக மதிப்பீடுகளின்படி, விவசாயத்தின் மொத்த மதிப்பு கூட்டு (ஜி.வி.ஏ) 3.6 சதவீத வளர்ச்சியைக் காட்டியுள்ளது, இது ஊரக பகுதிகளில் சிறந்த நுகர்வுகளின் வாய்ப்பைக் குறிக்கிறது.
2020-21ம் பயிர் ஆண்டில் உணவு தானியத்தின் மொத்த உற்பத்தி 2.7 சதவீதம் அதிகரித்து 305.44 மில்லியன் டன் என்ற புதிய சாதனை படைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், டிராக்டரின் உள்நாட்டு விற்பனை 2020-21ம் ஆண்டில் 27 சதவீதம் அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவக்காற்று இந்தாண்டு இயல்பாக இருக்கும் என்ற முன்னறிவிப்பும், ஊரக வருவாயை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எளிதாக தொழில் செய்யும் விதிமுறை அமலாக்கம்:
எளிதாக தொழில் செய்யும் சீர்திருத்தத்தை அமல்படுத்தியதற்காக, 2020-21ம் நிதியாண்டில், 20 மாநிலங்கள் ரூ.39,521 கோடி கூடுதலாக கடன் பெற அனுமதி வழங்கப்பட்டது.தமிழகம் உள்ளிட்ட 20 மாநிலங்கள் எளிதாக தொழில் செய்யும் சீர்திருத்தத்தை அமல்படுத்தியுள்ளன.





















