வேலையின்மை அதிகரிப்பை ஏற்க மோடி அரசு மறுக்கிறது-ராகுல் காந்தி குற்றச்சாட்டு
புதுடெல்லி:
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல் காந்தி பல்கலைக்கழக மாணவர்களுடன் டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு மைதானத்தில் நேற்று கலந்துரையாடினார். அப்போது மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து ராகுல் காந்தி பேசியதாவது:-
நாட்டில் வேலையின்மை அதிகரிப்பு பிரச்சினை கவலை அளிக்கிறது. இதை ஒரு பிரச்சினையாக பிரதமர் நரேந்திர...
இன்னொரு மகனையும் ராணுவத்திற்கு அனுப்புவேன்-புல்வாமா தாக்குதலில் பலியான ராணுவ வீரரின் தந்தை பேட்டி
பாகல்பூர்:
காஷ்மீர் மாநிலத்தில் துணை ராணுவ வீரர்கள் 2 ஆயிரத்து 547 பேர் விடுமுறை முடிந்து நேற்று பணிக்கு திரும்பினர். அவர்கள் அனைவரும் நேற்று அதிகாலை 78 வாகனங்களில் ஜம்முவில் இருந்து பள்ளதாக்கு பகுதிக்கு திரும்பி கொண்டிருந்தனர். அந்த வாகனங்கள் அணி வகுத்து செல்ல பாதுகாப்புக்கு கவச வாகனங்களும்...
உ.பி. கும்பமேளாவில் பாஜக தலைவர் அமித்ஷா, முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் புனித நீராடினர்
லக்னோ:
உ.பி.யின் பிரயாக்ராஜ் நகரில் நடக்கிற கும்பமேளா மிகவும் பிரசித்திப் பெற்றது. இந்த விழாவை முன்னிட்டு, உலகெங்கிலும் இருந்து கோடிக்கணக்கான மக்கள் புனித நீராடுவது வழக்கம்.
அந்த வகையில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய புண்ணிய நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் கும்பமேளா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. அடுத்த...
புதுவை சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்-அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அறிவிப்பு
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவை சபாநாயகர் வைத்திலிங்கம் எங்களின் மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரியவர். எங்களின் நண்பரும் ஆவார். அவரது சமீபத்திய செயல்பாடுகள் சபாநாயகருக்குரிய நடுநிலையை தவறுகிறாரோ? என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
சபாநாயகர் பதவியில் இருந்து கொண்டே பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாக...
கருப்பு பண மோசடி வழக்கு- கவுதம் கெய்தான் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு
புதுடெல்லி:
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சியில் 2010-ம் ஆண்டு இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து முக்கிய பிரமுகர்களின் பயன்பாட்டுக்காக 12 அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு ரூ.3,600 கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்டது. இதில் ரூ.362 கோடி லஞ்சப் பணம் இடைத்தரகர்கள் மூலம் கைமாறியதாக குற்றச்சாட்டு...
சரத் கமல், பங்காரு அடிகளாருக்கு பத்ம ஸ்ரீ விருது- ஜனாதிபதி வழங்கினார்
புதுடெல்லி:
இந்தியாவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு உயரிய விருதுகளான பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ ஆகிய விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் கடந்த ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்டது. பத்ம விபூஷண் 4 பேருக்கும், பத்ம பூஷண் 14 பேருக்கும், பத்ம...
முன்னாள் மத்திய மந்திரி தனஞ்செய் குமார் காலமானார்
மங்களூரு:
கர்நாடக மாநிலம் தட்டிசண கன்னட மாவட்டம் வேணூரைச் சேர்ந்தவர் தனஞ்செய் குமார் (வயது 67). முன்னாள் மத்திய மந்திரியான இவர் நீண்ட காலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். 4 மாதங்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இதனால் மங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு...
ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாத அமைப்புகள் பந்த்-மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ஸ்ரீநகர்:
காஷ்மீர் மக்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கும் சட்டப்பிரிவு 35-ஏக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்கு எதிராகவும், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு சலுகைகளை தொடர்ந்து வழங்க வலியுறுத்தியும், பிரிவினைவாத அமைப்புகள், இரண்டு நாட்களுக்கு முழு அடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுத்தன.
அதன்படி இன்று முழு அடைப்பு...
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சுட்டுக் கொலை
கொல்கத்தா:
மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டம் தாரியா பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் நஸ்கார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகரான இவர், தாரியா பஞ்சாயத்து தலைவி சுவப்னா நஸ்கரின் கணவர் ஆவார்.
கார்த்திக் நேற்றிரவு தங்கரகாளி பகுதியில் இருந்து பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். ...
காங்கிரசிடம் நாங்கள் பிச்சை கேட்கவில்லை-கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி
பெங்களூரு:
கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி மைசூருவில் நிருபர்களிடம் கூறியதாவது:-
வரும் பாராளுமன்ற தேர்தல் தொகுதிப் பங்கீடு குறித்து சில காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக ஜே.டி.எஸ். கட்சிக்கு அதிகபட்சமாக 7 தொகுதிகளுக்கும் மேல் ஒதுக்கீடு செய்ய முடியாது என்று கூறி...

















