நிலக்கரி ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்தது அவ்விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக லாரியை ஓட்டிவந்த ஓட்டுநர் உயிர் தப்பினார்.

நன்னிலம், ஜூன். 10 –

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே சிகார்பாளையம் பகுதியில் காரைக்காலில் இருந்து டால்மியாபுரம் என்ற பகுதிக்கு நேற்று காலை நிலக்கரி ஏற்றி வந்த லாரி வேகத்தடையை கவனிக்காமல் சாலை வளைவில் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்தது.

இவ்விபத்தில் லாரியை ஓட்டி வந்த சிதம்பரம் மதுராந்தகம் பெரிய தெருவை சேர்ந்த பிரிதிவிராஜன் என்ற  25 வயது ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக சிறு காயத்துடன் உயிர் தப்பினார்.

இவ்விபத்தினால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து நன்னிலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here