நன்னிலம், மே. 27 –

தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜ் …

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே மாப்பிள்ளை குப்பம் கடைத்தெரு பகுதியில் சிங்காரவேலு என்பவர் பெட்டி கடை நடத்தி வருகிறார்..

அவர் நடத்தும் பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை குட்கா பொருட்கள் விற்கப்படுவதாக நன்னிலம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது..

அதன் அடிப்படையில் அடிப்படையில் இன்று அதிகாலை 4 மணியளவில் நன்னிலம் காவல்துறை ஆய்வாளர் ரேகா ராணி தலைமையில் காவல்துறையினர் மாப்பிள்ளை கப்பம் சிங்காரவேலு பெட்டிக்கடையில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்பொழுது சுமார் ஒரு லட்சம் மதிப்புள்ள விமல் பாக்கு, ஹான்ஸ், விமல் பாக்கு 1, கூலிப்  ஆகிய  தடை செய்யப்பட்ட போதை குட்கா புகையிலை பொருட்கள் மற்றும்  இதற்குப் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து சிங்காரவேலு மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here