திருவாரூர், ஜன. 14 –
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் நகர பாஜக சார்பாக கூத்தாநல்லூரில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் நம்ம ஊரு மோடி சமத்துவப் பொங்கல் விழா நடைப்பெற்றது.
இவ் விழாவில், 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். மேலும் இவ்விழா தொடங்கியதும் பொங்கல் பானை வைத்து வெண்பொங்கல் சர்க்கரை பொங்கல் வைத்து, விழாவிற்கு வந்தவர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, மாணவர்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும், சிறார்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் பெண்கள் மற்றும் முதியவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் எனத் தனியாக நடைபெற்றன.
இக்கலை நிகழ்ச்சி மற்றும் விளையாட்டு போட்டிகளில் பங்குப் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும், கூத்தாநல்லூர் பாஜக நகர செயலாளர் ராஜகோபால் மிகச் சாறப்பாக செய்திருந்தார். மேலும், இந்நிகழ்ச்சியில் பாஜக மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் பொதுமக்கள் என திரளானவர்கள் பங்கேற்று விழாவனை சிறப்பித்தனர்.