புதுச்சேரி, மே. 12 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்…

புதுச்சேரி திருக்கனூர் பகுதியில் 10 க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு உணவில் விஷம் கலந்து கொள்ளப்பட்டது தொடர்பாக அப்பகுதி மக்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

புதுச்சேரி புறநகர் பகுதி திருக்கனூர் லட்சுமி நகரில் 25 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கிராம பகுதி என்பதால் இவர்கள் இரவு நேரங்களில் வெளியாட்கள் நடமாட்டம் இருந்தால் அதனை அறியும் வகையில் தெருவில் 10 க்கும் மேற்பட்ட நாய்களுக்கு தினமும் உணவளித்து வளர்த்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் நாய்களுக்கு உணவளித்து விட்டு இன்று காலை வந்து பார்த்த போது தெருவில் உள்ள 12 நாய்கள் அங்காங்கே சுருண்டு உயிரிழந்த நிலையில் இருந்தததை கண்ட அப்பகுதி மக்கள் அப்பகுதியை சுற்றி பார்த்த போது மர்ம நபர்கள் யாரோ கோழியில் விஷம் வைத்து அதனை நாய்களுக்கு கொடுத்ததில் அதனை சாப்பிட்ட நாய்கள் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக அப்பகுதி மக்கள் திருக்கனூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நாய்களுக்கு விஷம் வைத்து கொன்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் உயிரிழந்த நாய்களின் உடல்களை கால்நடை மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி உள்ள அப்பகுதி மக்கள், இது தொடர்பாக தேசிய விலங்குகள் நல வாரிய ஆணையத்திலும் புகார் தெரிவித்துள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here