காஞ்சிபுரம், மே. 27 –

தம்பட்டம் செய்திகளுக்காக தினேஷ்…

உத்திரமேரூர் அருகே இரண்டு கோவில்களின் பூட்டை உடைந்து 1/2 சவரன் தங்க நகை மற்றும்  அம்மன், பெருமாள் சிலையின் மீது இருந்த 600 கிராம் எடை உடைய வெள்ளி கிரீடத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சிறுப்பீனாயூர் ஊராட்சியில் அங்கன்வாடி தெரு அருகே பிரசன்ன வெங்கடேச பெருமாள் மற்றும் ஏகாம்பர ஈஸ்வரர் கோவில் உள்ளது.

இந்த கோவில்களில் நேற்று இரவு புகுந்த மர்ம நபர்கள் கோவிலின் பூட்டை உடைந்து அம்மன் மற்றும் பெருமாள் சிலைகளில் இருந்த 1/2 சவரன் தங்க நகை மற்றும் மூன்று வெள்ளி கீரிடத்தை திருடி சென்றனர்.

மேலும், கோவில் உண்டியலில் இருந்த சுமார் நான்கு ஆயிரம் பணத்தையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சாலவாக்கம் போலீசார் இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து கொள்ளை  சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here