பெருங்குடி, ஏப். 03 –
சென்னை பெருங்குடியில் உலக சுகாதாரத் தினத்தை முன்னிட்டு தனியார் மருத்துவமனை நடத்திய ஆரோக்கியமா வயிற்றுக்கான ஓட்டம் என்ற தலைப்பில் மெகா மாரத்தான் போட்டி இப்போட்டியில் வெற்றிப் பெற்றவர்களுக்கு ஒரு லட்சம் பரிசுத் தொகை மற்றும் சான்றிதழை நடிகர் சரத்குமார் வழங்கினார்.
சென்னை பெருங்குடியில் உள்ள பிரபல தனியார் (ஜெம் மருத்துவமனை) மருத்துவமனை சார்பில் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு ஆரோக்கியமான வயிற்றுக்கான ஒட்டம் என்கின்ற தலைப்பில் மெகா மரத்தான் போட்டி இன்று காலை 5:45 மணிக்கு துவங்கியது. இதில் 7 கிமீ , 5 கிமீ , 3 கிமீ என மூன்று பிரிவுகளில் நடைபெற்றது.
இந்த மாரத்தான் போட்டியில் 6 வயது முதல் 60 வயது உள்ளவர்கள் என சுமார் 1500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஓடினர். இந்த மாரத்தான் போட்டியை அகில இந்திய பல்கலைக்கழகங்களின் தலைவர் திருவாசகம், ஜெம் மருத்துவமனை தலைவர் பழனிவேலு, இயக்குநர் டாக்டர் செந்தில்நாதன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
மூன்று பிரிவுகளில் ஆண் பெண் என முதல் 6 இடங்களை பிடித்து மாரத்தானில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கும் அடுத்தடுத்து வெற்றி பெற்ற நபர்களுக்கும் ரூபாய் ஒரு லட்சம் பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்களை நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் மற்றும் அடையார் பொறுப்பு துணை ஆணையர் மகேந்திரன் ஆகியோர் வழங்கினார்கள்.