உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஆர். காமராஜ் கடந்த நவ-19 அன்று அறிக்கை என்றை வெளியிட்டுள்ளார் அதில் பின் வருமாறு குறிப்பிட்டுள்ளார்.  பொது விநியோகத் திட்டத்தில் தற்பொழுது 10,19,491 குடும்ப அட்டைகள் சர்க்கரை குடும்ப அட்டைகளாக உள்ளன. இந்த குடும்ப அட்டைகளை வைத்திருப்பவர்களில் பெரும்பாலானோர் தங்களுடைய குடும்ப அட்டைகளை அரிசிப் பெறகூடிய குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்து தரவேண்டும் என்ற கோரிக்கையினை ஏற்று, தமிழ்நாடு முதலமைச்சர் கீழ்க்கண்ட உத்தரவினைப் பிறப்பித்துள்ளார்கள் சர்க்கரைக் குடும்ப அட்டைதாரர்கள், தங்கள் குடும்ப அட்டைகளை தகுதியின் அடிப்படையில் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்ய விரும்பினால், அதற்கான விண்ணப்பங்களை தங்களுடைய குடும்ப அட்டையின் நகலினை இணைத்து,  இன்று முதல் 26.11.2019 வரை www.tnpds.gov.in என்ற இணைய முகவரியிலும், சம்மந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் உதவி ஆணையர் களிடமும் சமர்ப்பிக்கலாம். அவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள், உடனடியாகப் பரிசீலனை செய்யப்பட்டு, சர்க்கரை குடும்ப அட்டைகள் (sugar optioncards), தகுதியின் அடிப்படையில் அரிசி குடும்ப அட்டைகளாக (rice cards) மாறுதல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here