கும்பகோணம், பிப். 05 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள மாங்குடி ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் சிறப்புத்திட்ட முகாம் நடைப்பெற்றது அதில் பங்கேற்ற விவசாயி ஒருவர் 35 ஆண்டுகளுக்கு மேல் பட்டா மாற்றத்திற்காக பலமுறை அரசுத்துறை வாயல்களில் ஏறியிறங்கி அழைந்து வருகிறார். இந்நிலையில் மக்களுடன் முதல்வர் சிறப்புத் திட்ட முகாமில் பங்கேற்ற அவர் துறை சார்ந்த அலுவலர்களிடம் பட்டா மாற்றத்திற்கான மனுவினை அளித்துள்ளார். அதனை படி அம்மனு மீது ஆய்வு மேற் கொள்ளப்பட்டு, மூன்றே தினங்களில் பட்டா மாற்றம் அம்முகாமின் சார்பில் செய்து தரப்பட்டுள்ளது.

கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள வலையப்பேட்டை வருவாய் கிராமம், மாங்குடியில் வசிப்பவர் முத்தையன் மகன் சந்திரசேகரன். இவர் பரம்பரை விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர், மாங்குடி கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்துவிடம் 1988 ஆம் ஆண்டில் புல எண்.32 உட்பிரிவு 9சி; இதில் 7 ஏர்ஸ், அதாவது, 21 செண்ட் நிலத்தைக் கிரயம் செய்து வாங்கிவுள்ளார். மேலும் அதனைத்தொடர்ந்து அந் நிலத்திற்கான பட்டா மாற்றம் செய்திட சந்திரசேகரன் பல ஆண்டுகளாக முயன்றும் பட்டா மாற்றத்தினை அரசு இது வரை செய்து தரவில்லை என தெரிவிக்கிறார்.

இந்நிலையில் கடந்த அதிமுக ஆட்சியில் 18.4.2018 மக்கள் நேர்காணல் முகாம் வலையப்பேட்டை வருவாய் கிராமம், மாங்குடியில் நடைபெற்றது. அம் முகாமில் கலந்து கொண்ட விவசாயி சந்திரசேகரன் இந்த நிலத்திற்குப் பட்டா மாற்றம் கோரி மனு (மனு எண்.84) கொடுத்துள்ளார். இருப்பினும் நீண்ட காலமாக பட்டா மாற்றம் கிடைக்கப்பெறாத நிலையில் இருந்து வந்துள்ளார்.

தொடர் முயற்சியை மேற் கொண்டு வந்த விவசாயி சந்திரசேகரன் அண்மையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்கள் குறை தீர்க்கும் திட்டமான “மக்களுடன் முதல்வர்” எனும் சிறப்பு திட்டம் கடந்த ஆண்டு முதல் தமிழக முழுவதும் நடைபெற்று வருகிறது.

அச்சிறப்பு திட்டத்தின் படி ஒவ்வொரு கிராமத்திலும், அந்தந்த வட்டார வட்டாட்சியர் தலைமையில் முகாம் நடத்தி மக்கள் குறைகளைக் கேட்டு 30 தினங்களில் தீர்வு காணுமாறு அரசு அதிகாரிகளுக்கு தமிழக முதல்வர் அறிவுரைகள் வழங்கினார்.

அந்த திட்டத்தின்படி லட்சக்கணக்கான மக்களின் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேறி வருவதாக பரவலாக அம் முகாமில் பங்கேற்று வரும் பயனாளிகள் தெரிவிக்கின்றனர். மேலும் அச்சிறப்பினை பாராட்டி தமிழக அரசிற்கும் முதல்வருக்கும் நன்றியினை அவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில்  வலையப்பேட்டை வருவாய் கிராமத்தைச் சேர்ந்த மாங்குடி கிராமத்திலுள்ள சமூதாய கூடத்தில் கடந்த 20.12.2023 தேதி மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கும் உரிய ஆவணங்களுடன் சென்று சந்திரசேகரன் பட்டா மாற்றம் கோரி விண்ணப்பம் செய்தார். அந்த விண்ணப்பத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு பிப்.2 ஆம் தேதி சந்திரசேகரனுக்கு பட்டா மாற்றம் செய்யப்பட்டு கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலகத்தின் இணைய சேவை மூலம் வெளியிடப்பட்டது.

இதையடுத்து 35 ஆண்டுகளுக்கு மேல் முடியாத பட்டா மாற்றத்தை மூன்றே நாளில் மக்களுடன் முதல்வர் திட்டத்தில் முடித்து வைக்கப்பட்டுள்ளதை அடுத்து விவசாயி சந்திரசேகரன் அளவிலா மகிழ்ச்சியில் தான் இருப்பதாக அவ் விவசாயி தெரிவித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here